Advertisment

”இருக்குற பிரச்சனையில இது வேறயா?” கார்த்தி சிதம்பரத்தின் ட்வீட்டுக்கு அட்வைஸ் சொன்ன இணையவாசிகள்

நான் பிசிசிஐ அமைப்பின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karti chidambaram tweet

karti chidambaram tweet

karti chidambaram tweet : இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் பதவி குறித்து கார்த்தி சிதம்பரம் போட்ட ட்வீட்டுக்கு இணையவாசிகள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு பதில்களை பதிவு செய்தனர்.

Advertisment

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றே வாரியத்தின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் அதன் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி பங்கேற்கிறார். இதேபோல் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் முகமது அசாருதீனும், டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் ரஜத் சர்மாவும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் நடைபெறும் தேர்தலில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும், பொருளாளாராக அருண் துமாலும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களின் வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இந்நிலையில் இதுக் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதில், “ “எனது தந்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்து, நான் பிசிசிஐ அமைப்பின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும். எப்படி இந்த ‘தேசியவாதிகளும்', ‘பக்தாஸும்' ரியாக்ட் செய்திருப்பார்கள்?” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு இணையவாசிகள் கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு பதவிகள் வகித்ததை சுட்டிக்க்காட்டி பல்வேறு பதில்களை அளித்தனர். காங்கிரஸ் கட்சியில் இருந்த பலரும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்து வருவதும் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த பதில்களை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சிலர் “போய் இருக்குற பிரச்சனையை பாருப்பா அப்பாவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை” என்ற பதில்களை கூறியுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment