Advertisment

Karunas Letter: சபாநாயகர் தனபாலை நீக்க சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் கடிதம்!

MLA Karunas Sent Letter to Tamil Nadu State Legislative Assembly: சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ANti CAA Live updates - Karunas

ANti CAA Live updates - Karunas

MLA Karunas Sends Notice Seeking Removal of TN Speaker P Dhanpal: சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளருக்கு எம்எல்ஏ கருணாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

சாதி மோதலைத் தூண்டும் வகையிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தாக்கிப் பேசியதாகவும் எம்.எல்.ஏ. கருணாஸ் கைதாகி ஜாமீனில் விடுதலையானார்.

கருணாஸ் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர் என்பதால் அவர் மீது கட்சிதாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இதற்காக அரசு கொறடா ராஜேந்திரன் சபா நாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதை ஏற்று கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.

இந்நிலையில் நேற்று (அக்.2) இரவு, புளியங்குடி டிஎஸ்பி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு தேடிச் சென்றனர்.

கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவு நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டபோது மரியாதை செலுத்த சென்ற கருணாஸுக்கும் , மற்றொரு அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக கருணாஸ் உட்பட 32 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கில் கருணாஸை கைது செய்வதற்காக நேற்று இரவு கருணாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால் அப்போது கருணாஸ் வீட்டில் இல்லாததால் போலீசார் திரும்பி சென்றனர்.

இதையடுத்து, இன்று காலை கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருணாஸ் அனுப்பிய கடிதம்

இந்தச் சூழ்நிலையில், சபாநாயகர் தனபாலை நீக்க கோரி கருணாஸ் சார்பில் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், "சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சட்டசபை விதிகளை மீறி சபாநாயகர் செயல்படுகிறார்.

‘‘நான் தமிழக சட்ட சபையில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. வாக இருக்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்டப்பிரிவு 68 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்ட 179 (சி) விதியின் கீழ் சபாநாயகர் தனபாலை பதவிநீக்கம் செய்ய வேண்டும். மேற்கண்ட சட்ட பிரிவுகளின்படி அவருக்கு 14 நாட்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சட்டசபையை உடனே கூட்டி சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

கடிதத்தின் நகல் சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. கருணாஸ் சார்பில் அவரது வக்கீல்கள் சட்டசபை செயலாளரிடம் மனுவை அளித்துள்ளனர்.

Speaker Dhanapal Mla Karunas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment