Advertisment

திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kattu mannar koil assembly election case madras high court - காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Kattu mannar koil assembly election case madras high court - காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisment

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொது தேர்தலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் (48450) வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டார். அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட அதன் தலைவர் திருமாவளவன் ( 48363) தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

பெரியார் பற்றிய கருத்து - ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு

கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தேர்தல் அதிகாரி விஜயராகவன் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான தேர்தல் அதிகாரி விஜயராகவன், நிராகரிப்பட்ட தபால் வாக்குகளை பிரித்து நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். நிராகரிக்கப்பட்ட 102ல் சிலவற்றில் ஓட்டுசீட்டில் இல்லையென்றும், பலவற்றில் சான்றொப்பம் சரியாக இல்லை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றியை எதிர்த்து வி.சி.க தலைவர் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய 27ம் தேதி வரை தடை!

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment