நேற்று இரவு கடந்து நள்ளிரவு வரை திமுக தொண்டர்கள் எவருமே காவேரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து கொஞ்சம் கூட அசரவில்லை. தங்களின் தலைவர் கலைஞரை பார்த்தே தீர வேண்டும் என்ற வேட்கையில் கொட்டும் மழையிலும், போலீஸ் தடியடிக்கும் கூட அஞ்சாமல் காத்திருந்தனர். பின்னர், கருணாநிதி உறவுகள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு செல்ல, ஸ்டாலின் அறிக்கைக்குப் பிறகு, தொண்டர்கள் கலைய ஆரம்பித்தனர். இருப்பினும், பல தொண்டர்கள், காவேரி மருத்துவமனை வளாகத்திற்கு வெளியேயும், சாலையின் நடுவே உள்ள சுவரிலும் படுத்து உறங்கினர்.
மருத்துவர்கள் சொன்னது போல, உதய சூரியனின் உடல் சீராக உள்ளது என்ற நம்பிக்கையுடன், முதல் ஆளாய் இன்று காலை சூரியன் உதிக்க, தொடர்ச்சியாக முதல்வர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மருத்துவமனை வந்து நலம் விசாரித்தனர். நடிகர்கள் சிவகுமார், அவரது மகனும் முன்னை ஹீரோவுமான சூர்யாவும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்திருந்தனர்.
அதுகுறித்த ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ.....