கடத்தல்காரர்கள் தவற விட்டார்களா? சென்னை மீனவர்கள் வலையில் சிக்கிய ரூ100 கோடி போதைப் பொருள்
மாமல்லபுரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கரையில் மிதந்து வந்த பேரலில் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் எனும் போதைப் பொருளைக் கண்டறிந்தனர்.
மாமல்லபுரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கரையில் மிதந்து வந்த பேரலில் ரூ.100 கோடி மதிப்புள்ள 78 கிலோ மெத்தாம்பெடாமைன் போதைப் பொருளைக் கண்டறிந்தனர்.
Advertisment
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று பேரல் ஒன்று வந்து கரை ஒதுங்கியது. மீன் பிடிக்க கடலுக்கு செல்ல இருந்த மீனவர்கள், முதலில் ஆயில் அல்லது டீசல் பேரலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதனை உடைத்து பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேரலுக்குள், சீன மொழியிலும், ஆங்கிலத்திலும்'ரீபைன்ட் சைனீஸ் டீ 'என அச்சிடப்பட்ட 78 பாக்கெட்டுகள் இருந்தது.
போதை பொருட்களாக இருக்கலாம் என சந்தேகித்த மீனவர்கள் உடனடியாக மாமல்லபுர கடலோர காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறை, 78 பாக்கெட்டுகளையும் சென்னையில் உள்ள போதை பொருள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பினர். ஆய்வில் , பாக்கெட்டில் இருப்பது டீ தூள் அல்ல போதைப் பொருள் என்பது நிரூபணமானது.
மெத்தாம்பெடாமைன் போதைப் பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த வஸ்து என்பதால் இதை கை தேர்ந்த மருத்துவர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த உலகம் முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து செயல்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை போதை தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்தக் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil