Advertisment

ஈசா யோகா பயிற்சிக்கு வந்த பெண் மாயமான வழக்கு; 5-ம் நாளாக போலீசார் தேடுதல் வேட்டை

கோவை ஈசா யோகா பயிற்சிக்கு வந்த பெண் மாயமான வழக்கு; சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 5-ம் நாளாக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஈசா யோகா பயிற்சிக்கு வந்த பெண் மாயமான வழக்கு; 5-ம் நாளாக போலீசார் தேடுதல் வேட்டை

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஶ்ரீ என்ற பெண் கோவை ஈசா யோகா மையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சிக்காக வந்தார்.

Advertisment

publive-image

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பயிற்சி முடிந்த நிலையில், பயிற்சி முடிவடைவதற்கு முன்னதாகவே அவர் மாயமானார். இதனையடுத்து சுபஶ்ரீயின் கணவர் பழனிக்குமார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

இதையும் படியுங்கள்: ஜன.,2-ல் சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் 210 சி.சி. டி.வி கேமரா உதவியுடன் போலீஸ் கண்காணிப்பு

publive-image

அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை துவங்கியுள்ளார். இந்த வழக்கில் மாயமான பெண்ணை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது புகைப்படம் அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில், 5 ஆவது நாளாக தேடுதல் வேட்டையை போலீசார் தொடர்ந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment