Advertisment

சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா? - அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற ஊடகங்களின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kp anbazhagan, minister kp anbazhagan, tamil nadu govt can take action on vice chancellor mk surappa, அண்ணா பல்கலைக்கழகம், துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை, complaint on anna university vc mk surappa, துணை வேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அமைச்சர் கேபி அன்பழகன், anna university vice chancellor mk surappa, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், justice kalaiyarasan, governor banwarilal purohit

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற ஊடகங்களின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்துள்ளார்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், தனி நபர் விசாணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ள நிலையில், சூரப்பா துணை வேந்தர் பதவியில் தொடரக்கூடாது. அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விசாரணையை எதிர்கொண்டு, குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சூரப்பா மீது நடத்தப்படுகின்ற விசாரணைக்கான காரணம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், உண்மை நிலையை அறிவதற்காகவும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததன் எதிரொலியாகவே விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழுவை கண்டு சூரப்பா பயப்பட தேவையில்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளான அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விசாரணையை எதிர்கொண்டு, குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். சூரப்பா தவறு செய்தாரா? என்பதை விசாரிக்கவே குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையிலேயே சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், திராவிட முன்னேற்றக்கழக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். அதில், சூரப்பாவை தமிழக அரசு பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், சூரப்பா தொடர்ந்து பதவியில் நீடிப்பது அழகல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளிக்கையில், யார் மீது புகார்கள் எழுந்தாலும், அவரை இடைநீக்கம் செய்ய கோருவது தலைவர்களின் வேலையாக மாறிவிட்டது. சூரப்பா மீது விசாரணை நடத்தப்பட்டு விசாரணை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர்கல்வித்துறை முடிவெடுக்கும்.” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஊடகங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் விளக்கம் கேட்டபோது, விதிகளுக்கு உட்பட்டே துணைவேந்தர் மீதான இடைநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருப்பதாவது, “பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமணம் செய்கிறார். அதனால், துணைவேந்தர்களை அரசு நேரடியாக இடைநீக்கம் செய்ய முடியாது. ஆளுநரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே சூரப்பாவை இடைநீக்கம் செய்ய முடியும்.

சூரப்பா மீதான விசாரணை நடைபெறும் நேரத்தில் அவரை துணைவேந்தர் பொறுப்பில் வைத்திருப்பது பொருத்தமாக இருக்காது என்று நினைத்து அரசு அவரை இடைநீக்கம் செய்ய முடிவெடுத்தாலும் ஆளுநர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இடைநீக்கம் நடவடிக்கை என்பது சாத்தியம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, , அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

சூரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் அனைத்தும் முறைப்படி நீதிபதி கலையரசனிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணைக்கு கூடுதலாக பணியாளர்கள் தேவை என்று நீதிபதி கலையரசன் உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அலுவலகம் அமைக்கப்பட்டதும் ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Anna University M K Surappa Minister K P Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment