Advertisment

தொடரும் சோகம்: குரங்கணி தீ விபத்தின் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மிகுந்த மகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் இவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவின.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தொடரும் சோகம்: குரங்கணி தீ விபத்தின் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இயற்கை அழகை ரசிக்க சென்றவர்களுக்கு நடந்த சோகம் இன்று வரை தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு  சென்னை மற்றும் ஈரோட்டில் இருந்து மொத்தம் 36 பேர் கொண்ட குழு தேனியில் உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு  சென்றிருந்தது.  சனிக்கிழமை (10.3.18) மதியம் உணவுக்கு எல்லோரும் ஒன்றாக இணைந்த போது தான் காட்டுத் தீ பரவி வருகிறது என்ற தகவலே  தெரிந்துள்ளது.

கணவன் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் செய்வதறியாமல் தெறித்து ஓட ஆரம்பித்தனர். ஆனால், இயற்கை பேரழிவை யாரால் கட்டுப்படுத்த முடியும் , 9 பேர் அந்த கணமே  பரிதாபமாக  தீயிக்கு இறையாகினர்.

மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்றது.  ராணுவ விமானங்கள வரவழைக்கப்பட்டன. அதுமட்டுமில்லாம், குரங்கணி மலைப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களும்  மீட்டுப் குழுவினருடன் இணைந்து  பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

பலத்த தீக்காயங்களுடன் மீட்டக்கப்பட்டவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்ற வாரம், உயிருக்கு போராடி வந்த ஈரோட்டைச் சேர்ந்த புதுப்பெண் திவ்யா, கோவைச் சேர்ந்த திவ்யா, சென்னையைச் சேர்ந்த நிஷா என மூன்று பெண்களும் அடுத்தத்து இறந்து போனார்கள். இதனால்  குரங்கணி காட்டுத் தீயின் பலி எண்னிக்கை 12 ஆக உயர்ந்திருந்தது.

பின்பு, (16.3.18) அன்று,  மதுரை அரசு மருத்துவமனையில் 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த சென்னை ஆசிரியர் அனுவித்யா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞரும்  சிகிச்சை பலனின்றி இறந்தனர்.இதில் பெரும் சோகம் என்னவென்றால்,  ஈரோட்டைச் சேர்ந்த 4 நண்பர்கள் கூட்டமாக சென்றவர்கள் தான் விவேக்,திவ்யா, கண்ணன் மற்றும் தமிழ்செல்வன்.

இவர்கள் நாவருமே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.  மலையேற்றத்திற்கு முன்பு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் இவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவின.

இந்நிலையில், தற்போது குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி மற்றும் சென்னையைச் சேர்ந்த நிவ்யா பிரக்ருதி என்ற இரு பெண்களும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று(23.3.18) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment