நடிகை குஷ்பூவை முரசொலி நாளிதழ் தாவல் திலகம் என்று விமர்சித்துள்ளது.
பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு தொடர்பாக பாஜக சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவை நடிகை குஷ்பூ விமர்சித்தார். வெயில் காலத்தில் சாலையை தோண்டாமல் , மழை காலத்தில்தான் சாலையை தோண்டுகின்றனர் என்றும் பல விஷயங்களில் திமுக ஆட்சியை குறித்து விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில், குஷ்பூவை ’தாவல் திலகம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர் தனது பேச்சை கட்டுபடுத்த வேண்டும் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது, குறுகிய காலகட்டத்தில் அதிக கட்சிகள் மாற்றியதாக குஷ்பூவை சுட்டிகாட்டி அவரை தாவல் திலகம் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.