Advertisment

நீட் பற்றி கூடியோசிப்போம் : கமல்ஹாசன் கருத்து

நீட் பற்றி நீட்டி முழங்காதீர். விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil cinema,

கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியல் குறித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது.

Advertisment

அசராத கமல், ஊழலுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளார். மாணவி அனிதா தற்கொலைக்குப் பின்னர் நீட் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் தனது ட்விட்டரில் நீட் பற்றி நீட்டி முழங்காதீர். இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டுக்கு எதிராக சிலர் கமெண்டை அவர் ட்விட்டரில் பதிவிட்டனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், ‘களம் இறங்கிவிட்டதை உணராத தமிழ் ட்விட்டர்ஸ் அனைவருக்கும், இதுவும் களமே. பல களம் பொருதும் மாமல்லரன்றோ நாம்’ என்று பதிலளித்துள்ளார்.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment