டாஸ்மாக் மதுபான விலை குவாட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று (மார்ச் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முன்னிலையில் உள்ளது.
180 எம்எல் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. மீடியம் மற்றும் ப்ரீமியம் வகை ஆல்கஹால் வகைகளுக்கு கூடுதலா ரூ.20 செலுத்த வேண்டியது இருக்கும்.
232 வகை பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் ஆகியவற்றை டாஸ்மாக் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாடு மதுவகைகளின் குறைந்தபட்ச விலை ரூ.130 (180 எம்எல்) ஆக இருக்கும். அதிகபட்சமாக ரூ.2,600 (750 எம்எல்) விலை இருக்கும்.
இதன்மூலம், மாநில அரசு ரூ.4,396 கோடி வருவாயை ஈட்ட முடிவு செய்துள்ளது.
கடைசியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் மதுபான விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“