LokSabha Elections 2019 : பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கிய நிலையில், திரைப் பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றும், எந்தவித பாதுகாப்பும் இன்றி தனி ஆளாக வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியது பலரின் பாராட்டுக்களை பெற்றதோடு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
மேலும் படிக்க.. 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள் லிஸ்ட் இதோ..
1. முதல்வர் பழனிசாமி:
எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் தனி ஆளாக வந்து, மக்களோடு வரிசையில் நின்று தனது வக்கினை பதிவு செய்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
#tamilnadu cm #edappadipalaniswami at the polling station in Salem. #tamilnaduvotes pic.twitter.com/inTPCmeg2F
— Filter Kaapi (@FilterKaapi10) 18 April 2019
2. அன்பழகன்:
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
3. துணை முதல்வர் ஓபிஎஸ்:
தேனி பெரியகுளம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
4.திமுக தலைவர் ஸ்டாலின்:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Reporter to #Stalin: Show your finger saar. Saar, show your finger.
He did ????????????!!!#LokSabhaElections2019 #TamilNadu #TamilnaduElections2019 pic.twitter.com/Nc6NIBAuoD
— krishnamurthy (@krishna0302) 18 April 2019
4. தமிழிசை சவுந்தர ராஜன் :
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது கணவருடன் சென்று வாக்களித்தார். தமிழிசை சவுந்தரராஜன்.
#TamilNadu #BJP chief #TamilisaiSoundararajan casts her vote along with her husband in #chennai #LoksabhaElections2019 #2019Elections #DHPoliticalTheatre | @DeccanHerald pic.twitter.com/21gdfffHIt
— Sivapriyan E.T.B. (@sivaetb) 18 April 2019
5. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி:
மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தார்.
6. நடிகை குஷ்பு:
நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார்.
VIPs cast their vote #kamalHaasan #Kushboo #ShrutiHaasan #VijayAnthony pic.twitter.com/eoJdtDHX5x
— Shanmugha Sundaram J (@shanmughamsjTOI) 18 April 2019
7. ப.சிதம்பரம்:
சிவகங்கையில் கண்டனூர் பெத்தாள் ஆச்சிபள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்#LokSabhaElections2019 #Chidambaram pic.twitter.com/v9bOXVBck6
— Sun News (@sunnewstamil) 18 April 2019
8. கார்த்தி சிதம்பரம் :
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் தனது செந்த ஊர் #கண்டனூரில் வாக்களித்தார்.#KartiChidambaram4Sivaganga
# @KartiPC @INCTamilNadu pic.twitter.com/W8I1PlBt8A
— Palanivel Rajan . S (@s_palani) 18 April 2019
9.வைகோ:
கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மேலும் படிக்க.. மும்முரமாக அரங்கேறும் வாக்குப்பதிவு… வரிசையில் நின்று வாக்களிக்கும் தலைவர்கள்
மற்ற அரசியல் தலைவர்களை போல் சொந்த ஊரை மறந்து சென்னையில் செட்டிலாகி விடாமல் இன்றளவும் தன் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பெருமை சேர்க்கும் வகையில் வாக்களித்த தலைவர் #வைகோ அவர்கள்.... pic.twitter.com/u6xxSOObEZ
— மு.அருள் செல்வன் (@Twittarul) 18 April 2019
10. மு. க ஆழகிரி :
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று தனது வாகினை பதிவு செய்தார். மு.க.அழகிரி.
11. கனிமொழி :
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் தூத்துக்குடியின் திமுக வேட்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி.
இன்று வாக்களித்தேன் pic.twitter.com/GrQNFAVFyf
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) 18 April 2019
12. டிடிவி தினகரன் :
தமிழகம் தலை நிமிர,
தமிழர் வாழ்வு மலர,
வாக்களித்தார் #மக்கள்_செல்வர் #டிடிவிதினகரன் அவர்கள்
???????? pic.twitter.com/efdwLM0Wmu
— Karthikeyan Murugan (@KarthikeyanMKMa) 18 April 2019
13. டி. ராஜேந்திரன் :
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்கு சாவடியில் இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வாக்களித்தார்.
14. தேமுதிக தலைவர் விஜயகாந்த் :
குடும்பத்துடன் சென்று சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
#DMDK leader #Vijayakanth and wife #Premalatha cast their vote. #TamilNadu #LokSabhaElection2019 pic.twitter.com/ve23gXjAyo
— Pratiba Raman (@PratibaRaman) 18 April 2019
15. சீமான் :
சென்னை சாலிகிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.