Advertisment

ஸ்டாலினுக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு : சைதை துரைசாமி பகீர் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலினுக்கும், மணல் மாஃபியா சேகர்ரெட்டிக்கும் இடையே பணபரிவர்த்தனை நடந்தது என்று முன்னாள் மேயர் சைதை துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin - sekar reddy

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், மணல் மாஃபியா சேகர்ரெட்டிக்கும் இடையே தொடர்பு இருந்தது. இருவரிடையே பணபரிவர்த்தனை நடந்தது என்று சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி பகீர் குற்றச்சாட்டை சொல்லியுள்ளார்.

Advertisment

சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:

என் மீதான குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்தால் நான் செய்யும் அனைத்து பணிகளில் இருந்து விலகி கொள்வதாக முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். 

அதே போன்று ஸ்டாலின் மீதான நான் வைக்கும் குற்றச்சாட்டுகளை இல்லை என்று நிரூபிக்க தயாராக உள்ளாரா?  

என்னுடைய பொது வாழ்வில் பல கட்டங்களில் பல சேவைகளை செய்து வருகிறேன். கல்வி சேவை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் மனித நேய அறக்கட்டளையை உருவாக்கி இன்றைக்கு 3000 மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.

இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளில் உயர் பதவிகளை அவர்கள் பெற்றுள்ளனர் என மனதிருப்தி அடைந்துள்ளேன். ஆண்டுதோறும் 15,000 மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வு, டிஎன்சிஎஸ்சி உள்பட மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டி  தேர்வுகளுக்கு இலவசமாக  பயிற்சி அளித்து வருகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் இந்த பயிற்சிகளுக்கு  தனியார்கள்  வசூலிக்கும் கட்டணத்தில் பாதி கட்டணத்தை நான் வசூலித்தால் கூட ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் வருமானம் என்னால் ஈட்ட முடியும்.

பணத்தின் மீது தீராத காதல் கொண்டவன் அல்ல நான். அறம் சார்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் என்னுடைய  பணியை செய்து வருகிறேன்.

நான் தற்போது வசித்து கொண்டிருக்கும் இந்த வீடு கல்வி அறக்கட்டளைக்கு தானமாக கொடுத்து தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். அதே போன்று வேளச்சேரியில் உள்ள என்னுடைய திருமண மண்டபம் 13 கிரவுண்ட் கொண்டது. இங்கு ஏழை எளியவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி கொள்ளவும் வழிவகை செய்துள்ளேன். இப்படி பல்வேறு சேவைகளை செய்து வரும் என் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தேவையின்றி கூறி வருகிறார். 

நான் செய்யும் சேவையில் ஏதாவது ஒரு சேவையை ஸ்டாலின்  செய்தது உண்டா? 

என் மீது பல்வேறு அவதூறுகளை கூறி வரும் ஸ்டாலின் அதனை நிரூபித்தால் நான் செய்யும் அனைத்து பணிகளிலிருந்தும் விலகி கொள்ள தயாராக உள்ளேன். அதே போன்று ஸ்டாலின் மீது 3 குற்றச்சாட்டுகளை வைக்கிறேன்.

சேகர் ரெட்டிக்கும், ஸ்டாலின் குடும்பத்திற்கும் பணத் தொடர்பு உண்டா? இல்லை? சேகர் ரெட்டிக்கும் ரெட்ஜெயிண்ட் மூவிசுக்கும் பணவரவு,செலவு உண்டா இல்லை என்பதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல  வேண்டும்.

2ஜி ஊழல் வழக்கில் தொடர்புடைய ஷாகித் பால்வை  2 முறை ஸ்டாலின் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி அதன் மூலம் கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கைமாறியதாக சிபிஐ விசாரணையின் போது சாதிக் பாட்ஷா வாக்குமூலம் அளித்தது தொடர்பாக விசாரணை நடத்த தயாரா?

அதே போல் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாடு சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக பினாமி பணபரிவர்த்தனை தொடர்பாக உதயநிதி, ஸ்டாலினிடம் ரெய்டு நடத்தி சிபிஐ விசாரணை மேற்கொண்டது. ரெய்டு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பும் நீங்கள் ரெய்டு குறித்து தகவல்களை வெளியிட வேண்டும் என கூறிவரும் ஸ்டாலின் உங்களிடம் சிபிஐ நடத்திய இந்த ரெய்டு மற்றும் விசாரணை தொடர்பான தகவல்களையும் வெளியிடுமாறு கோருவாரா?

அமைதியாக இருந்த என்னை ஸ்டாலின் சீண்டிவிட்டார். இனி உங்கள் குடும்பம் அரசியல்தில்லுமுல்லு செய்து மக்கள் மறதியை மூலதனமாக வைத்து நீங்கள் செய்த ஊழல்கள் அனைத்தும் கஜானா  போல் சேர்த்து வைத்துள்ளேன். அதை மக்கள் மன்றத்தில் ஒவ்வொன்றாக வெளியிட தயங்க மாட்டேன்.

என் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என உரிய விளக்கத்தை அளித்த போதும் தொடர்ந்து இதுபோன்ற தவறான தகவலை ஸ்டாலின் கூறி வருகிறார். 

இது குறித்து 3 கடிதங்களை ஸ்டாலினுக்கு நான் எழுதி  உள்ளேன். அதற்கு இதுவரை எந்த பதிலையும் ஸ்டாலின் கூறவில்லை.  ஆகவே இன்னும் 2,3 தினங்களில் ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment