லண்டன் ஓவலில் நடந்து வரும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று கோலி பவுலிங்கை தேர்வு செய்ய, எந்தவித தடுமாற்றமும் இன்றி பாகிஸ்தான் மிகச்சிறப்பாக ஆடி வருகிறது. தற்போது அந்த அணி விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் குவித்துள்ளது.
உலகம் முழுக்க உள்ள இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளித்து வருகின்றனர். இதில் நம்ம தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் விதிவிலக்கா என்ன... சட்டமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்... அதுவும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நேற்று ஆளுநரை சந்தித்து புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய ஸ்டாலின், இன்று தனது பேரக் குழந்தைகளுடன் ரிலாக்சாக அமர்ந்து டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் படம் வெளியாகியுள்ளது.
அவரது ட்விட்டர் பக்கத்திலேயே இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது.