Advertisment

ஆக்கிரமிப்பு அகற்றம், கட்டுமானங்கள் இடிப்புக்கு இடைக்கால தடை ஜூன் 1 வரை நீட்டிப்பு

தற்போது அந்த இடைக்கால உத்தரவுகளை ஜூன் 1அம் தேதி வரை நீட்டித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court, chennai high court extended interim stay till june 1, சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அகற்றம் தடை நீட்டிப்பு, கட்டம் இடிப்பு தடை நீட்டிப்பு, extended interim stay to stop enchroachment, extended interim stay to stop building demolition, corona, coronavirus, covid-19, chennai high court news, latest corona news, tamil corona news

chennai high court, chennai high court extended interim stay till june 1, சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அகற்றம் தடை நீட்டிப்பு, கட்டம் இடிப்பு தடை நீட்டிப்பு, extended interim stay to stop enchroachment, extended interim stay to stop building demolition, corona, coronavirus, covid-19, chennai high court news, latest corona news, tamil corona news

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆக்கிரமிப்பு அகற்றவும், சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிக்கவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகளை ஜூன் 1ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 1,937-ஆக உயர்வு

இதன் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம், சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவுகள், காலாவதியாக நிலை ஏற்பட்டதால், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவின்படி தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த இடைக்கால உத்தரவுகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கடந்த மார்ச் 26ல் உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது அந்த இடைக்கால உத்தரவுகளை ஜூன் 1அம் தேதி வரை நீட்டித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு - ஐகோர்ட் தள்ளுபடி

ஆக்கிரமிப்பு அகற்றவும், இடத்தை காலி செய்யவும் கட்டிடங்கள் இடிக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தி இருக்காவிட்டால் ஜூன் 1ம் தேதி வரை அந்த உத்தரவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இடைக்கால ஜாமீன் உத்தரவுகளையும், பரோல் உத்தரவுகளையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment