Advertisment

முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை அகற்ற கோரிய வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை அகற்ற கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court news, Sexual harassment of woman SP by IG, Police IG Murugan, பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி.முருகன் மீது பாலியல் புகார், Sexual harassment case against IG Murugan, Case Shit to Neighbouring State or Delhi

Madras High Court news, Sexual harassment of woman SP by IG, Police IG Murugan, பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி.முருகன் மீது பாலியல் புகார், Sexual harassment case against IG Murugan, Case Shit to Neighbouring State or Delhi

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களை அகற்ற கோரிய வழக்கில் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், மறைந்த தமிழக முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி. ராமசந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்க்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதி அமைக்கபட்டுள்ளது. இதனை தற்போதைய அரசு சுமார் 15 கோடி ரூபாய் செலவில், ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட முடிவு செய்துள்ளது.

மேலும் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வதிகளின் படியும், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி கடற்கரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்த வித கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது. மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. இதில் தொடர்ந்து இது போன்ற சமாதிகள் ஏற்பட்டால் அதன் தன்மை பாதிக்கும்.

கடற்கரை பகுதியை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை விதிக்கபட்டுள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் இங்குள்ள முன்னாள் முதல்வர்கள் சமாதிகளை அங்கிருந்து அகற்றி சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அமைந்துள்ள இடத்தில் வைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்தேன் ஆனால் எனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே உடனடியாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக அரசு, பெரு நகர சென்னை மாநகராட்சி ஆகியோர் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.

Madras High Court C N Annadurai M G Ramachandran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment