Advertisment

மதுரையில் செப். 2ம் தேதி முதல் 10 நாட்கள் புத்தகக் கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில், செப்டம்பர் 2ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கி 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி அரங்கு திறந்திருக்கும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுரையில் செப். 2ம் தேதி முதல் 10 நாட்கள் புத்தகக் கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில், செப்டம்பர் 2ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கி 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி அரங்கு திறந்திருக்கும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisment

மதுரையில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது:

கூடல் மாமதுரையிலே கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு முதல்வர் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பக வருகின்ற செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி முடிய அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்துகொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுகொண்டுள்ளார்” என்று அறிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment