Advertisment

சவுக்கு சங்கருக்கு ரூ65 லட்சம் அரசு சம்பளம் எப்படி? ஐகோர்ட் கேள்வி

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீண்டும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியது குறித்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகும், அவருக்கு ரூ.65 லட்சம் அரசு சம்பளம் வழங்கப்பட்டது எப்படி என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Savaukku Sankar, Savukku Shankar, Savukku Sankar controversy, சவுக்கு சங்கர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தமிழ்நாடு, madurai high court bench, justic GR Swaminathan, Tamilnadu

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீண்டும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியது குறித்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகும், அவருக்கு ரூ.65 லட்சம் அரசு சம்பளம் வழங்கப்பட்டது எப்படி என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது ஏற்கெனவே நீதிமன்ற அவமதிபு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்ததோடு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், விமர்சனம் செய்ததாக நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற வழக்குப் பதிவு செய்தது. ஆனாலும், சவுக்கு சங்கர் மீண்டும் ஊடகங்களில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார் இது தொடர்பான அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது:

சவுக்கு சங்கர் என்பவர் ஊடகத்துறையில் உள்ளவர்,விமர்சகர். தனிநபர்கள் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவைகளை கடுமையாக தாக்கி செயல்படுகிறார்.

அவர் கடந்த சில மாதங்களாக என் மீதும் எனது தீர்ப்புகள் குறித்தும் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதாவது யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை உரிய முறையில் விசாரித்து அவர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்தேன்.

இதை சவுக்கு சங்கர் மோசமான வார்த்தைகளில் கண்டித்திருந்தார். எனது தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு அவரது புண்படுத்தும் கருத்துகள் மூலம் எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடுகிறேன் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி‌.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், மாதம் 43 ஆயிரம் விதம் 13 ஆண்டுகளாக தற்போது வரை தோராயமாக 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு தொகை வழங்கி வழங்கியுள்ளீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏற்கனவே சவுக்கு சங்கர் என்பவர் மீது கடந்த மாதம் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் ரெட் பிக்ஸ் என்ற youtube சேனலில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்‌‌. எனவே, இவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படுகிறது என கூறி இதுகுறித்து சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீண்டும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியது குறித்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதோடு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment