Advertisment

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு: மதுரையை வந்தடைந்த பொதுமக்கள் பேரணி

நரசிங்கம்பட்டியில் துவங்கி மாநகர் தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் வரையிலான 16 கி.மீ தொலைவுக்கு நடைபயண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
madurai

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மேலூர் அருகே தொடங்கிய பொதுமக்கள் பேரணி தற்போது மதுரையை வந்தடைந்துள்ளது.

மதுரை மேலூரில் 2015 ஹெக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பல்லாயிரம் மக்களின் பங்கேற்பில் மாபெரும் நடைபயண போராட்டம் தற்போது மதுரையை வந்தடைந்துள்ளது. இந்த திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

நரசிங்கம்பட்டியில் துவங்கி மாநகர் தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் வரையிலான 16 கி.மீ தொலைவுக்கு நடைபயண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைத்துள்ளனர்.

இதனிடையே, நடைபயணமாக பேரணி வந்த பொதுமக்களை மதுரை மேலூர் அருகே நரசிங்கபுரத்தில் காவல்துறை தடுத்து நிறுத்தினர். நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல், வாகன பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதால் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் வாகனத்தில் பேரணி மேற்கொண்டனர். 

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment