Advertisment

மீண்டும் ஓ.பி.எஸ் அணிக்கு திரும்பிய மைத்ரேயன்: காரணம் என்ன?

ops admk : பன்னீர் செல்வம் அணிக்கு மீண்டும் தாவியுள்ளார் மைத்ரேயன். இந்நிலையில் அவரை மீண்டும் ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
மீண்டும் ஓ.பி.எஸ் அணிக்கு திரும்பிய மைத்ரேயன்: காரணம் என்ன?

பன்னீர் செல்வம் அணிக்கு மீண்டும் தாவியுள்ளார் மைத்ரேயன். இந்நிலையில் அவரை மீண்டும் ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சென்னையில் உள்ள எழும்பூரில் உள்ள மண்டபத்தில் மாற்றி கட்சியினர் ஓபிஎஸ் அணியின் அதிமுகவில் சேரும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் மற்றவர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் அவர் பேசியதாவது “ ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தபோது அவருடன் இருந்தேன். ஆனால் அதன்பிறகு எனது புத்தி மாறியது. வேளியை தாண்டிய ஆடாக நான் மாறினேன். ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு ஓபிஎஸ்-தான். அனைவரும் ஒன்றாக்கி கட்சியை நடத்தும் திறன் ஓபிஎஸ்-க்கு மட்டுமே இருக்கிறது. எனது உடல் நிலை சரியில்லாதபோது, என்னை அழைத்து பேசினார் ஓபிஎஸ்” என்று அவர் கூறினார். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment