Advertisment

சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காரணம் தெரிஞ்சா அசந்து போவீங்க

ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் புறப்பட இருந்த நிலையில், அந்த நபர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காரணம் தெரிஞ்சா அசந்து போவீங்க

சென்னை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த சம்பவம் திங்கள்கிழமை ஹைதராபாத் விமான நிலையத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் புறப்பட இருந்த நிலையில், அந்த நபர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

publive-image

வெடிகுண்டு மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்புப் படையினர் உடனடியாக விமானத்தை ஆய்வு செய்து பயணிகளை வெளியேற்றினர்.

விசாரணைக்குப் பிறகு, தாமதமாக ஓடியதால், விமானத்தில் ஏற மறுத்த பயணி ஒருவர் செய்த புரளி அழைப்பு என்பது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment