Advertisment

500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார்

கோவையில் உள்ள டாஸ்மாக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்ற முயன்ற போது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார்

கோவை சுண்டக்காமத்தூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு வாலிபர் ஒருவர் சென்றார். அவர் 500 ரூபாய் தாள் கொடுத்து மது பாட்டில்கள் வாங்கினார். ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது அது கள்ள நோட்டு என்று தெரியவந்தது. உடனே அவர் மற்ற ஊழியர்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Advertisment

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவைப்புதூர் அறிவொளி நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. கள்ள நோட்டுகள் கீழே கிடந்ததாகவும், அதை தான் எடுத்து வந்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். 500 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. ரமேஷ் இடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் 56 பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ரமேஷை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரமேஷ் பொய்யான தகவலை கூறுவதாகவும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து நோட்டுகளை கொடுத்தது யார் என தகவல் சேகரிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment