Advertisment

டெலிபோன் இணைப்பக மோசடி வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவித்த உத்தரவு ரத்து

'கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை 12 மாதங்களில் முடிக்க வேண்டும்’

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dayanidhi Maran, Kalanidhi Maran, மாறன் சகோதர்கள், மாறன் சகோதரர்கள் மீது டெலிபோன் இணைப்பக மோசடி வழக்கு

Dayanidhi Maran, Kalanidhi Maran, மாறன் சகோதர்கள், மாறன் சகோதரர்கள் மீது டெலிபோன் இணைப்பக மோசடி வழக்கு

மாறன் சகோதரர்களை சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Advertisment

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து விசாரணை செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டது. அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2007 ஆம் ஆண்டில் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பி.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு (வழக்கு பதிவு) செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றபத்திரிக்கையில், ‘2004 முதல் 2007 ஆம் ஆண்டு கால கட்டம் வரை மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்.-ல் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதிக்க அனுமதி பெற்ற அதி உயர் தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் நிறுவனம் ஆன சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியுள்ளார்.

இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்ததன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1,78,71,391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது. இந்த புகாரில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டு சதி, மோசடி ஆவணங்கள் தயாரித்தல், உள்ளிட்ட சட்டபிரிவின் கீழ் சோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கின் கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் குற்றபத்திரிக்கை வழங்கபட்டது.

இதனையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனு மீது கடந்த மார்ச் 14 ஆம் தேதி (2018) நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுவிப்பதற்காகவும். தயாநிதி மாறன் குற்றம் செய்ய வேண்டும். உள் நோக்கத்துடன் அவர் செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரங்களை சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யவில்லை, இந்த வழக்கில் கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் என்ற முறையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இந்த குற்றச்சாட்டுகளில் அவர் ஈடுபட்டார் என்பதை சிபிஐ நிரூபிக்க தவறிவிட்டது. இந்த வழக்கில் சன் தொலைக்காட்சியை சேர்க்கவில்லை. எனவே அதன் ஊழியர்கள் மீது மட்டும் குற்றச்சாட்டுவது சரியானது அல்ல. எனவே சன் தொலைக்காட்சி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர்.’ என அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தொலைபேசி இணைப்புகள் முறைகேடான முறையில் எங்கு பயன்படுத்தபட்டது, எப்போது பயன்படுத்தப்பட்டன, எந்த எண்ணுடன் பேசப்பட்டது என்பது தொடர்பான சி.டி ஆதாரங்கள் உள்ளன என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை கடைசி வரை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை சிபிஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது எனவே அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டெல்லி சிபிஐ சார்பில் மேல் முறையீடு செய்யபட்டுள்ளது. அந்த மனுவில், ‘சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் மட்டுமே விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்த நிலையில், 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது.

மேலும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வழக்கை சந்திக்க குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் விசாரித்து இன்று உத்தரவிட்டார். அவர் தன்னுடைய உத்தரவில், ‘இந்த வழக்கில் சிபிஐ சார்பில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. எனவே ஏழு பேரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். சிபிஐ சார்பில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் விசாரணையை நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்யவில்லை. அதில் சில ஆவணங்களை மட்டுமே எடுத்து அதன் அடிப்படையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. தவறுதலாக கூடுதல் இணைப்பு பெறப்பட்டு இருந்தாலும் அதற்காக குற்ற வழக்கு பதிவு செய்ய முடியாது என்ற விசாரணை நீதிமன்றம் உத்தரவை ஏற்க முடியாது.

தொலைபேசி இணைப்பு வழங்கியதில் அனைத்து விதிகளும் மீறபட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விதிகளை மீறி அனுமதி அளித்துள்ளனர். இவ்வாறு அனுமதியளித்த இணைப்புகளுக்கு எந்த கட்டணங்களும் பெறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகை, அமைச்சருக்கான சலுகை என உள்ள நிலையில் அதனை விட அதிகமான இணைப்புகளை பெற்று பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

இவ்வாறு பெறபட்ட இணைப்புகள் தயாநிதி மாறன் மூலமாக அவருடைய சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு வணிக ரீதியாக பயன்படுத்தபட்டுள்ளது. இதனை சிபிஐ தன்னுடைய வாதத்தில் எடுத்துவைத்துள்ளனர். இதனை நீதிமன்றம் ஏற்கின்றது. எனவே இந்த வழக்கில் இருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை 12 மாதங்களில் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

 

Chennai High Court Dayanidhi Maran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment