Advertisment

மெரினாவில் காவிரி போராட்டம் : அனுமதி, தடை, அப்பீல்?

சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவிருப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Marina Protest, Permission Granted, Ayyakannu

Marina Protest, Permission Granted, Ayyakannu

சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவிருப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. சமூக அமைப்புகள், இளைஞர்கள் அமைப்புகள் பலவும் மெரினா கடற்கரையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்பின. ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரினாவில் திரண்ட இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாததால், மெரினாவில் இளைஞர்கள் திரளாத வகையில் கண்ணும் கருத்துமாக போலீஸ் பாதுகாத்து வந்தது.

காவிரி பிரச்னையை முன்னிட்டு மார்ச் 23-ம் தேதி சென்னையில் திமுக.வினர் மறியல் நடத்தியபோதும், மெரினாவில் திரளும் முயற்சி நடந்தது. போலீஸார் அதை முறியடித்தனர். இந்தச் சூழலில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மெரினாவில் கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு போராட்டம் நடத்த அனுமதிக்க வில்லை என்றும், அதன்பிறகு ஜல்லிக்கட்டுப் போராட்டம் மட்டுமே அனுமதியின்றி அங்கு நடந்தது எனவும் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த ஆட்சேபனை இல்லை என்றும், பொதுமக்கள் கூடுகிற மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘காவிரி முக்கியமா, மெரினா முக்கியமா?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். மொத்தம் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சார்பில் வாதிடப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், ‘ஒரு நாள் மட்டும் மெரினாவில் உண்ணாவிரதம் நடத்த விவசாயிகள் சங்கத்திற்கு அனுமதி’ அளித்து உத்தரவிட்டது. ஜனநாயக அடிப்படையில் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டது.

அய்யாகண்ணுவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து டிவிஷன் பென்ச்-ல் நேற்று மாலையே தமிழக அரசு தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி வழங்கிய அனுமதிக்கு தடை விதித்தது. அனுமதிக்கப்பட்ட வேறு இடங்களில் அய்யாகண்ணு போராட்டம் நடத்தலாம் என டிவிஷன் பெஞ்ச் உத்தரவில் கூறப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவிருப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.

Chennai High Court Marina Beach Cauvery Management Board Ayyakannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment