எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் அழகிய தமிழ் மகள் இவள் மற்றும் பல எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
Advertisment
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
பாடல் பாடி அசத்தினார் அமைச்சர் ஜெயக்குமார் :
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லக்ஷ்மண் ஸ்ருதி இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கச்சேரியை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒரு பாடலை பாட கச்சேரி குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, `அழகிய தமிழ் மகள் இவள்’ பாடலை ஜெயக்குமார் பாடினார். பின்னர் ரசிகர்கள் மற்றொரு பாடலை பாட வற்புறுத்தியதால், `நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க' பாடலை பாடினார். இந்தப் பாடலைத் தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மேடைக்கு வந்து தன்னுடன் அமைச்சர் ஒரு பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், சுசீலாவுடன் சேர்ந்து `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலை அமைச்சர் ஜெயக்குமார் பாடி அசத்தினார்.