Advertisment

வேலை வெட்டி இல்லாதவர் அண்ணாமலை: செந்தில் பாலாஜி தாக்கு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக பதில் அளித்தார்.

author-image
WebDesk
New Update
வேலை வெட்டி இல்லாதவர் அண்ணாமலை: செந்தில் பாலாஜி தாக்கு

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 3 நாட்கள் பயணமாக கோவை வருகிறார். நாளை (ஆகஸ்ட் 24) கோவை ஈச்சனாரியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஈச்சனாரியில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு 70 கோடி நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று, மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, போர்டலில் சரிபார்க்கும் வசதியையும் ,செலுத்த கூடிய தொகைக்கு சரிவர கணக்கு வைத்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்த வலியுறுத்தப்படும்.

நாம் 70 கோடி கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு தடை போடுகிறது. ஆனால் அவர்கள் பல்வேறு துறைக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையை காலம்தாழ்த்தி கொடுக்கிறார்கள். அதை நாம் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக தான் பார்க்க முடியும். மின்சார சட்டதிருத்த மசோதாவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இது என்ன அரசியல் கபட நாடகமா?" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசு ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும். அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத ஒரு நபர். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. ஊடகங்களை சந்தித்து எதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றிய கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம்.

அண்ணாமலை சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும் .

இரண்டு இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

சென்னை பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின் கட்டணம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த செந்தில்பாலாஜி, "2 ஆண்டுகள் சலுகைகளை அனுபவித்து கொண்டு அப்போதெல்லாம் மின் கட்டணம் செலுத்தாமல், இப்போது சொன்னால் அது ஏற்று கொள்ளமுடியாது. கடந்த கால அரசு செய்த தவறை நாம் தொடர முடியாது. முதல்வர் ஸ்டாலின் மிகுந்த கடனில் தவிர்த்து கொண்டிருக்கிற மின்சார வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மின்சார வாரியத்தை சரிவர நடத்தி வருகிறார்" எனத் தெரிவித்தார்.

மேலும் கோவையில் நாளை முதல்வர் கலந்து கொள்ளும் பொதுகூட்ட மேடையில் யார் இருக்கிறார். கீழே யார் இருக்கிறார் என்று நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள் என மாற்றுகட்சியிலிருந்து முக்கிய நபர்கள் இணைவது குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment