Advertisment

டெண்டர் முறைகேடு விவகாரம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இறுதி கெடு!

இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி பதிலளிக்க 2 வாரம் கடைசி கெடு விதித்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, chennai high court, minister velumani, corporation tender scam, dmk, arappaor iyakkam, plea, vigilance, police, order, reply

chennai, chennai high court, minister velumani, corporation tender scam, dmk, arappaor iyakkam, plea, vigilance, police, order, reply. சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி டெண்டர் முறைகேடு, திமுக, அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத்துறை, உத்தரவு

minister sp velumani : மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இறுதி கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம், முறைகேடு தொடர்பான விசாரணையை இனி லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.பொன்னி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மை செயலாளர் அனுமதியளித்துள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சங்கர் ஆஜராகி, முறைகேடு புகார் தொடர்பாக 349 உள்ளாட்சி டெண்டர்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி உள்ளதாகவும், 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 117 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்து, மேற்கொண்டு விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விசாரணையை கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி பதிலளிக்க 2 வாரம் கடைசி கெடு விதித்து விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Minister Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment