ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, 'வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். இது காலத்தின் கட்டாயம்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ''ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். அவரின் எண்ணங்கள், திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் அவரைச் சந்திப்பேன்'' என்று தெரிவித்தார்.