Advertisment

அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை - ஸ்டாலின் அறிவிப்பு; கோழிப் பண்ணையாளர்கள் வரவேற்பு

அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என உயர்த்தி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை - ஸ்டாலின் அறிவிப்பு; கோழிப் பண்ணையாளர்கள் வரவேற்பு

அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என உயர்த்தி அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 21) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவில் முட்டை, பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் சத்து மாவு, முட்டை, சத்து மாவு உருண்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அங்கன்வாடி மையங்களில் 1-2 வயது குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2-5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது.

தற்போது அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று (நவம்பர் 21) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அங்கன்வாடிகளில் வழங்கப்படும் முட்டைகளை கோழிப் பண்ணையாளர்கள் இடம் இருந்து தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மூலம் நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இருந்து கூடுதலாக 40 லட்சம் முட்டைகள் கொள்முதல் ஆகும் என்பதால் கோழிப் பண்ணையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment