Advertisment

இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குங்கள் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகொள்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80Gன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையை வாடும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என கூறியிருந்தேன். இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

நிதியுதவி வழங்கும் வழிமுறைகள்

மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி கிளை : தலைமைச் செயலக கிளை, சென்னை - 600 009

சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070

IFSC குறியீடு : IOBA0001172

CMPRF பான் எண் : AAAGC0038F

வெளிநாட்டில் இருந்து நிதியுதவி வழங்குபவர்கள் கவனத்திற்கு:

SWIFT குறியீடு: IOBAINBB001

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

மத்திய அலுவலகம், சென்னை.

UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள் மூலம் வழங்கலாம்.

காசோலை நன்கொடை

காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்: The Joint Secretary to Government & Treasurer, Chief Minister’s Public Relief Fund, Finance (CMPRF) Department, Secretariat, Chennai 600 009,Tamil Nadu, India. (அரசு இணைச் செயலாளர் & பொருளாளர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, நிதி (மு.பொ.நி.நி) துறை, தலைமை செயலகம், சென்னை 600 009, தமிழ் நாடு, இந்தியா) என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடமும் வழங்கலாம்.

அதேபோல், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80Gன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment