சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோரும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பின் போது தா. பாண்டியனிடன் மு.க. ஸ்டாலின் உடல் நலம் விசாரிக்க, தா. பாண்டியன் காவேரி மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள கருணாநிதியின் உடல்நிலையை பற்றி விசாரித்துள்ளார்.