Advertisment

உண்மை நின்றது.. நீதி வென்றது.. ஜாமினில் வெளிவந்த கருணாஸ் பேட்டி!

இதுபோன்று ஆயிரம் வழக்குகளை நான் சந்திக்க தயார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாஸ்

கருணாஸ்

முதலமைச்சர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஜாமினில் வெளியே வந்தார்.

Advertisment

கருணாஸ் ஜானிமில் விடுதலை:

கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

ஐபிஎல் போட்டியின்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் அவர் மீது போடப்பட்டது.  வழக்குகள் நெருக்கியதால் அவர் ஜாமினில் வெளி வருவது சற்று கடினம் தான் என்று  போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டு வழக்குகளில் இருந்தும் நேற்று (28.9.18)  அவருக்கு ஜாமின் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ் இன்று (29.8.18) காலை விடுதலையானார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்தும் பேசியதற்காக தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டு இருக்கிறது.

எந்த நிலை வந்தாலும் தன்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்தில் உள்ள சந்ததியினர் இந்த மண்ணிலே தொடர்ந்து வாழ்வதற்காக இதுபோன்று ஆயிரம் வழக்குகளை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். என் வழக்கில் உண்மை நின்றது  நீதி வென்றது’’ என்று கூறினார்.

Mla Karunas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment