அதிமுக எம்எல்ஏ கருணாஸ், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சுமார் 40 நிமிடங்கள் அதிமுகவைப் பற்றி சசிகலா மனமுருகி பேசியதாகவும், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை சீரழிய விட்டுவிடக் கூடாது என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தொண்டர்களின் கடிதத்திற்கு தொடர்ந்து சசிகலா பதில் கடிதம் எழுதி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.