பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், மாமல்லபுரம் வருவதையடுத்து, அங்குள்ள பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி - ஜின்பிங் இடையேயான சந்திப்பு, மாமல்லபுரத்தில் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இருநாட்டு தலைவர்களின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் கடும்சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனிடையே, மாமல்லபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றுமுதல் (11ம் தேதி) 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தலைவர்கள் வருகையை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.