கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் பெனடிட் ஆன்றோ. கிறிஸ்தவ பாதிரியாரான இவர் பிலாங்கல் கத்தோலிக்க ஆலையத்தில் பங்கு தந்தையாக பணியாற்றுகிறார்.
இவர் ஆலயத்துக்கு வரும் இளம்பெண்களுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். மேலும் வீடியோகால் சாட்டிங் செய்து அரை நிர்வாண கோலத்தில் நின்றுள்ளார்.
ஒரு கல்லூரி மாணவியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி அவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப் போல் பரவின.
முன்னதாக பாதிரியாரை ஒரு கும்பல் இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பாதிரியாரையும் தேடிவந்தனர். பாதிரியார் இளம் பெண் சம்பந்தப்பட்ட வீடியோ கால் சாட்டிங் மற்றும் புகைப்படங்கள் இணையத்தை அல்லோலப்படுத்துகின்றன.
இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பாதிரியார் ஆன்றோ நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது நர்ஸிங் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/