Advertisment

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

நளினி சிதம்பரம் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நளினி சிதம்பரத்திற்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

Advertisment

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட சாரதா சிட் பண்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் களிடமிருந்து பணம் வசூலித்து சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை திருப்பி கொடுக்க முடியாமல் ஏமாற்றியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அந்த நிதி நிறுவனத்தின் நிறுவனர் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 25 முறைக்கு மேல் ஆஜராகி வாதாடிய நளினி சிதம்பரத்திற்கு சாரதா சிட் பண்டு நிறுவன கணக்கில் இருந்து பெருந்தொகை வழக்கறிஞர் ஊதியமாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்தப் பணம் எவ்வாறு வழங்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தொடர்பான விசாரணைக்காக, (கடந்த ஆண்டு 2017) செப்டம்பர் 23 ஆஜராகும்படி, நளினிக்கு அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சாராத சீட் பண்டு வழக்கில் தான் குற்றம் சாட்டவராகவோ, சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை. சட்டப்படி பெண்களை விசாரணைக்கு அழைக்கக் கூடாது. அவர்களின் வீட்டிற்கு சென்று தான் விசாரிக்க வேண்டும், எனவே இந்த சம்மன் ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து செய்வதாகவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என புதிதாக நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு நளினி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை அடுத்து சாரதா நிதி நிறுவன வழக்கில் விசாரணைக்கு நளினி சிதம்பரம் (கடந்த ஜூலை 20 ஆம் தேதி) ஆஜராக அமலாக்கத் துறை புதிதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நளினி சிதம்பரம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் தனி நீதிபதி தன்னுடைய உத்தரவில் குற்ற விசாரணை சட்டம் 160 தின் படி விசாரணை தொடர்பாக ஏதும் உத்தரவிடவில்லை. எனவே, ஆஜராக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும், மேலும் புதிதாக அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்த் வெங்கடேஷ், நளினி சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும், அமலாக்கதுறை புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு நளினி சிதம்பரம் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Chennai High Court Nalini Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment