Advertisment

நீட் கலந்தாய்வு முறைகேடு: தந்தை, மகள் இருவரும் கேரளாவில் தலைமறைவு

neet exam Counselling cheating case : நீட்தேர்வு கலந்தாய்வில் மோசடி செய்த மாணவி, தந்தை இருவரும் கேரளாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக வழக்கை விசாரித்துவரும் பெரியமேடு காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்

author-image
WebDesk
New Update
NEET exam cheating case

NEET exam cheating case

நீட்தேர்வு கலந்தாய்வில் மோசடி செய்த மாணவி, தந்தை இருவரும் கேரளாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக வழக்கை விசாரித்துவரும் பெரியமேடு காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு கடந்த மாதம் 8 தேதி முதல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

கடந்த 7-ம் தேதி, கலந்தாய்வில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்‌ஷா அளித்த சான்றிதழ்களில் சந்தேகம் எழுந்தது .

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது, நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்றிருந்த மாணவி தீக்‌ஷா அதை 610 மதிப்பெண்களாக திருத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்‌ஷாமற்றும் அவரது தந்தையும், பல் டாக்டருமான மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மொபைல் போன் சிக்னல்கள் மூலம்  மாணவியின் குடும்பம் தற்போது கேரளாவில் இருப்பது கண்டறியப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருவரையும் கைது செய்ய கேரளாவுக்கு காவல்துறை குழு விரைந்துள்ளது.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment