Nellai Saravana Selvarathinam: சென்னையில் கிளை பரப்பிய சரவணா செல்வரத்தினம் நிறுவனம், மற்ற ஊர்களிலும் தனது கிளையை விரிவுப் படுத்தியது. அதன்படி, திருநெல்வேலியிலும் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அரிவாளுடன் கடைக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, நுழைவாயிலை சேதப்படுத்துகின்றனர். வெளியில் வேறு யாரும் தென்படவில்லை. உள்ளே வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களா, அல்லது ஊழியர்கள் மட்டும் தான் இவர்களிடம் மாட்டிக் கொண்டு தவித்தார்களா என்பது பற்றியும் தெரியவில்லை.
அரிவாளுடன் அதகளம் செய்த ரவுடி: கையில் மாவுக் கட்டுடன் சிறையில் அடைப்பு
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.