சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சத்ருஹனா புஜாரி பதவியேற்றார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் புதிய நீதிபதியை வரவேற்று பேசினர்.
பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி சத்ருஹனா புஜாரி, பாரம்பரியம் மிக்க இந்த உயர் நீதிமன்றத்திற்கு பணியாற்ற வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எந்த நீதிமன்ற தீர்ப்புகளை படித்து வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தேனோ, அதே நீதிமன்றத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டார்.
இவருடன் சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவை சேர்ந்த நீதிபதி சத்ருஹனா புஜாரி, 1960ல் பிறந்தார். 1986ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த இவர், 1987ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். 2003ல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013ல் ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.