Advertisment

சென்னையில் முதலிரவு அறைக்குள் புது மனைவி கொலை: கணவனும் தூக்கில் தொங்கினார்

சென்னை மீஞ்சூர் அருகே புதிதாக திருமணமான இளைஞர் முதலிரவில் மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
first night couples suicide, chennai news, chennai, tamil news, tamil nadu news, latest tamil news

first night couples suicide, chennai news, chennai, tamil news, tamil nadu news, latest tamil news

சென்னை மீஞ்சூர் அருகே புதிதாக திருமணமான இளைஞர் முதலிரவில் மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சென்னை மீஞ்சூர் அருகே உறவினர்களான நீதிவாசன்(24) மற்றும் சந்தியா(20) ஆகிய இருவருக்கும் புதன்கிழமை காலை உறவினர்கள் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, புதன்கிழமை அவர்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல் இரவு அறையில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்கவே, பயந்துபோன உறவினர்கள் பூட்டி இருந்த அறைக் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கே மணப்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அருகெ இரும்பு கம்பி இருந்ததைப் பார்த்துள்ளனர். ஆனால், முதலிரவு அறையில் நீதிவாசனைக் காணவில்லை என்பதை அறிந்தனர்.

முதலிரவு அறையில் புதிதாக திருமணமான பெண் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், மணமகன் நீதிவாசனைத் தேடியபோது அவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த காட்டூர் போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் காட்டூர் போலீசார், முதலிரவு அறையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டதற்கும் கணவன் தற்கொலை செய்துகொண்டதற்குமான காரணம் இன்னும் சரியாக தெரியவரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

முதலிரவு அறையில் புதுமனைவியைக் கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பயங்கர சம்பவம் மீஞ்சூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu Chennai Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment