தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ’நிவர்’ புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்தது. செவ்வாய்க்கிழமை காலை தென்மேற்கு வங்கக் கடலை மையமாகக் கொண்டு புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் 380 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கிமீ தென்கிழக்கு திசையிலும் நிவர் புயல் நிலை கொண்டிருந்தது.
அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் தீவிர சூறாவளி புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. நிவர் புயல் மேற்கு-வடமேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையிலும் நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது. நவம்பர் 25-ஆம் தேதி மாலை புதுச்சேரியை சுற்றியுள்ள காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை கடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்போது மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறி மணிக்கு 120-130 கிமீ / மணி வேகத்தில் காற்று வீசி, மணிக்கு 145 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும்.
இதனால், வட கடலோர ஆந்திரா மற்றும் யானம், தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகியவற்றின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என விசாகப்பட்டினத்தின் புயல் எச்சரிக்கை மையம் (சி.டபிள்யூ.சி) தெரிவித்துள்ளது.
இதனால் நவம்பர் 25-ம் தேதி, சித்தூர், நெல்லூர், பிரகாசம், கடப்பா, அனந்தபூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கர்னூல், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மற்றும் விசாகபட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா மற்றும் யானம் ஆகியவற்றில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கர்னூல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குண்டூர், பிரகாசம், நெல்லூர், கடப்பா, சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு கோதாவரி, விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு மத்திய வங்கக் கடலின், தெற்கு ஆந்திரா, நெல்லூர், மற்றும் சித்தூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் காற்று வீசும் வேகம் மணிக்கு 65-75 கிமீ வேகமாக இருக்கும். நவம்பர் 25-ம் தேதி தென் கடலோர ஆந்திராவின் பிரகாசம், குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில், மணிக்கு 70 கிமீ வேகத்தில் புயல் கடந்து செல்லும்.
ராயலசீமாவின் அனந்தபூர், சித்தூர், கடப்பா மற்றும் கர்னூல் மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில், மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கிமீ வேகத்தை எட்டும், நவம்பர் 26 அன்று தென் கரையோர ஆந்திரத்தின் கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசலாம்.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலிலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையிலும் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விசாகப்பட்டினம், மச்சிலிபட்டினம், கிருஷ்ணாபட்டினம் மற்றும் நிஜாம்பட்டினம் துறைமுகங்களில் தொலைதூர எச்சரிக்கை எண் இரண்டு (டி.டபிள்யூ -2) வைக்கப்பட்டுள்ளது. தொலைதூர எச்சரிக்கை சமிக்ஞை எண் இரண்டுடன், புயல் எச்சரிக்கை எண் 5, காக்கிநாடா மற்றும் கங்காவரம் துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.