Advertisment

நிவர் புயல் ஏற்படுத்தும் சேதம்: மத்திய உள்துறை அறிவுறுத்தல்

24 முதல் 26-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும்.

author-image
WebDesk
New Update
Nivar Cyclone in Tamil Nadu

Nivar Cyclone in Tamil Nadu

Nivar Cyclone:  தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் புயலாக உருவாகியுள்ளது.

Advertisment

சுமார் 120 கி.மீ வேகத்தில் டெல்டா மாவட்டங்களை தாக்கும் நிவர் புயல்.. அடுத்து என்ன நடக்கும்?

சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 25-ம் தேதி பிற்பகலில் இது கரையைக் கடக்கத் தொடங்கும். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதோடு மிக கனமழையும் பெய்யும். புயல் கரையைக் கடந்து வட தமிழகத்தின் வழியாக தெலங்கானா வழியாக சென்று 26-ம் தேதி மும்பை பகுதியில் வலுவிழந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்தது. தற்போது இந்த புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 440 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கில் 470 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 25-ம் தேதி கரையைக் கடக்கும் எனத் தெரிகிறது.

இதனால் 24 முதல் 26-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். 25 - 26-ம் தேதிகளில் ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளிலும், 26-27-ம் தேதி தெலுங்கானாவிலும் கனமழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் 24-ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும். 25-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், காரைக்காலில் அதி கனமழை பெய்யக் கூடும். கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய இடங்களில் 26-ம் தேதி அதி கனமழை பெய்யக் கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 24-ம் தேதி 100-110 கி.மீ வேகத்தில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காற்று வீசக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிவர் புயலானது, வீட்டு கூரைகள், மரங்கள், மற்றும் விவசாய நிலங்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

காலை டிபனுக்கு இது பெஸ்ட்: மிக்ஸ்டு வெஜிடபுள் புட்டு செய்வது எப்படி?

நிவர் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே சென்றிருந்தால் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment