போயஸ் கார்டன் வரும்போது தீபாவை யாரும் தடுக்கவில்லை என தீபாவின் சகோதரர் தீபக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தீபக் கூறும்போது: சகோதரி தீபாவை நான் தான் அழைத்தேன். தீபா வரும் போது நான் போயஸ் கார்டனில் தான் இருந்தேன். தீபா போயஸ் கார்டனுக்கு வரும் போது அவரை யாரும் தடுக்கவில்லை. கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு தீபா மரியாதை செலுத்தினார் என்று கூறினார்.