Advertisment

பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை; சேலம் மாவட்ட பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களின் சோகம்

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் 24 ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tribal welfare department, Tribal welfare Schools teachers salary issues, Tribal Welfare Schools teachers and non teaching staff

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் 24 ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டம், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்கள் பல மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணி புரிந்து வருகிறார்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் பழங்குடியினர் நலத்துறை இயக்குநருக்கு மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், சேலம் மாவட்டம், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் 24 ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை. பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்படாமல் பல மாதங்களாக பழைய ஊதியமே பெற்று வழங்கப்பட்டு வருகிறது; குறிப்பிட்ட சில ஆசிரியர்களுக்கு மலைவாழ் படி பெற்று வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அந்த மனுவில், இந்த பிரச்சினைகள் தொடர்பாக உயர் அலுவலர்களுக்கும் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களிடமும் பார்வை-1ல் கண்டுள்ளவாறு பலமுறை முறையிட்டும் நாளது தேதி வரை தீர்வு ஏற்படவில்லை.

சேலம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி - உயர்நிலைப்பள்ளி - மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர்

பணியிடங்களை ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதாக அறிகிறோம்.

பார்வை-2ல் கண்டுள்ள பழங்குடியினர் நல இயக்குனர் அவர்களின் கடிதத்தில்

பழங்குடியினர் நல உண்டி உரைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளில் ஒப்பளிக்கப்பட்ட

பணியிடங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் ஐகுர்சுஆளு

இணையதளத்தில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக

அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பார்வை-2ல் கண்டுள்ளவாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளி விடுதிகளில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பழங்குடியினர் நல இயக்குனர் அவர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சிலர் நாளது தேதி வரை மேற்கண்டவாறு எவ்விதமான அறிக்கையும் அனுப்பி வைக்காமலும் ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமலும்

மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பல மாதங்களாக ஆசிரியர்ககளுக்கான சம்பளம் மற்றும் இதர படிகள் சரியான முறையில் பெற

முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, இப்பொருள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மேற்படி ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் இதரப்படிகள் விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Salem District Scheduled Tribes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment