எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலன்ஸ் கமிஷன் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துத்துள்ளது.
நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக 2008ம் ஆண்டு எடப்பாடி பழசாமி மீது, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இபிஎஸ்-க்கு எதிரான புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை இபிஎஸ் நாடினார். உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறியது.
ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால், அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ அனுமதி கோரினார்.
ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கவுதம், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் மீது விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
அப்போது குறிப்பிட்ட அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil