அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தின் கதவுகளை பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத்தலைமையாக வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் 90%க்கும் அதிகமானோரின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறும் இரட்டை தலைமை தொடர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த சலசலப்பால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இந்நிலையில் கடும் மோதல் ஏற்பட்டது. தொண்டர்களால் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தனர். பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். இந்நிலையில் காவ்லதுறையினர் பாதுகாப்புடன் ஓபிஎஸ் அலுவகலத்திற்குள் நுழைந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil