Advertisment

ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு

தமிழக துணை முதல்வராகப் ஓ.பன்னீர்செல்வம் பதவியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dy CM OPS

தமிழக துணை முதல்வராகப் ஓ.பன்னீர்செல்வம் பதவியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இளங்கோவன் தாக்கல் செய்த பொது நல மனுவில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்ததை அடுத்து பன்னீர் செல்வம் அன்றே முதல்வராக பதவியேற்றார். பின்னர் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பதவியை கடந்த பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி கே. பழனிச்சாமி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு பிரிந்து இருந்த கட்சியை இணைக்கும் நடவடிக்கை எடுக்கபட்டது. இதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி ( ஆகஸ்ட்) தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக் கொண்டார்.

அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின் படி பிரதமர், அமைச்சர்கள், அல்லது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என்று மற்றுமே உள்ளது. ஆனால் துணை முதல்வர், அல்லது துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவிகள் ஏற்பது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. ஆனால் கடந்த 21 தேதி பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக பதவி ஏற்பதாக பதவிப்பிரமணம் ஏற்றுக் கொண்டார். நேரு பிரதமராக இருந்த போது வல்லபாய் படேல் துணை பிரதமராக இருந்தார். ஆனால் அவர் அமைச்சராகவே பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ஆதன் பிறகு லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய் ஆகியோர் துணைப் பிரதமராக செயல்பட்டனர். அது நிர்வாக ரீதியான பதவி மட்டுமே தவிர அரசியல் சட்டத்தின் படி துணை முதல்வர் பதவி இல்லை. ஆனால் பன்னீர் செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராகப் பதவி ஏற்பதாக தனது பதவி ஏற்பு உறுதி மொழியில் ஏற்றுக் கொண்டார்.

அரசியலமைப்பு சட்டத்தில் துணை முதல்வர் என ஒரு பதவியே இல்லை என்பதால், பன்னீர் செல்வம் துணை முதல் அமைச்சராக பதவி யேற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் படி, அமைச்சராக என்று கூறி தான் பதவியேற்க வேண்டும். ஆனால் துணை முதல் அமைச்சராக என கூறி பதவியேற்றன் மூலம் பன்னீர் செல்வம் அமைச்சராக பொறுப்பு வகிக்க சட்டபூர்வமாக தகுதியற்றவராகின்றார். எனவே எந்த தகுதியின் அடிப்படையில் துணை முதல்வராக பதவியில் நீடிக்கின்றனர் என விளக்கம் அளிக்க உத்தரவிடும்படியும், அவரின் பதவியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment