போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. இதன்பின் பேட்டியளித்த அமைச்சர், "வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும் போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும். சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வேகமாக வண்டி ஓட்டினால், ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும். குடிபோதையில் வாகனம் ஒட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.