Advertisment

ப.சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினர்கள் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

கார்த்தி சிதம்பரம், கார்த்தி மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு இரண்டு முறை நோட்டிஸ் அனுப்பியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ப.சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினர்கள் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்க கோரிய ப.சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினர்கள் மனுவை நிராகரித்து உயர்நீதிமன்றம்.

Advertisment

பிரிட்டனில் உள்ள கேம்பிரிஜில் சொத்துகள் வாங்கியதாகவும், அமெரிக்காவில் இரு நிறுவனங்களில் கணக்கில் காட்டாமல் முதலீடு செய்ததை மறைத்தாக கூறி, அந்த சொத்துகளின் விவரங்கள் வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்கள், வங்கி கணக்குகள், அவர்களது அனைத்து சொத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், கார்த்தி மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு இரண்டு முறை நோட்டிஸ் அனுப்பியது.

வருமானவரி துறையின் இந்த நோட்டீஸ்க்கு உரிய விளக்கம் அளித்த பின்னரும் மீண்டும் மீண்டும் வருமான வரி நோட்டிஸ் அனுப்பியதை எதிர்த்தும், தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்க வேண்டும் என நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கருப்பு பணம் சட்டத்தின் கீழ் தங்களிடம் விசாரணை நடத்த வருமானவரி துறைக்கு அதிகாரம் கிடையாது. மேலும் வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்து மற்றும் முதலீடுகள் தொடர்பாக உரிய ஆவணங்கள் , விளக்கங்கள் அளித்தும் 6 மாதங்களாக தங்களை வருமானவரிதுறை துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தங்கள் தரப்பில் வருமான வரி துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாகவும், இந்த நோட்டீஸை தொடர்ந்து தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

வருமான வரிதுறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்துவது என்பது வேறு, வழக்கு தொடர்வது என்பது வேறு எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடகூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி கருப்பு பணம் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை சார்பில் நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவர் மீதும் வழக்கு தொடரவும், நோட்டீஸ்க்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment