Advertisment

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: போராட்டத்தில் திராவிடர் கழகம்!

இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Broken Periyar Statue

Broken Periyar Statue

பெரியார் சிலை உடைப்பு: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள பெரியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இது குறித்து, போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில், சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என முழக்கங்களுடன்  திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணரை விமர்சித்துப் பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது. அதனால் தற்போது பெரியார் சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அதோடு, தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டரிலும் பெரியார் சிலை உடைப்பு குறித்த ஸ்டாலினின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Periyar Periyar Statue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment